ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட முஸ்லிம்கள். - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்.

ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளியை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்.





முத்துபேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளி இந்த 2010-௨௦௧௧ ஆம்  ஆண்டிற்கான ஆண்டு மலர் ஒன்று வெளியிட்டது அதில் உலக  முஸ்லிம்கள் அனைவரும் தங்கள்  உயிரை விட மேலாக மதிக்க கூடிய பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள்
தொழுது கொண்டு இருப்பது போல்  கற்பனை உருவம் (கார்டூன்) கொடுத்து அந்த புத்தகத்தில் நபிகளாரை கேவலபடுத்தி இருந்தார்கள்.இதனை கண்டித்து நாம் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம்  கடிதம் மூலமாகவும்,நேரடியாகவும்,தொலைபேசி மூலமாகவும் அந்த புத்தகத்தை திருப்பி வாங்கி அந்த பக்கத்தினை மாற்றி வெளி இடுமாறு முஸ்லிம்களின்   கண்டனத்தை தெரிவித்தோம்.ஆனால் கண்டனம் தெரிவித்து இரண்டு மாதங்கள்  ஆக  போகும்  சூழ்நிலையிலும் அந்த புத்தகத்தை திரும்ப பெறவில்லை ரஹ்மத் பள்ளி நிர்வாகம்.இதனை கண்டித்து 10.10.2011 இன்று  காலை10 மணியளவில் முஸ்லிம்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு பிறகும் புத்தகத்தை திரும்ப வாங்கவில்லை என்றால் தமிழகம் கொந்தளிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவிக்கும் என எச்சரித்தார். இதில் நபிகள் நாயாகம்(ஸல்) அவர்களை கேவல படுத்திய ரஹ்மத் பள்ளிக்கு எதிராக  கோசங்கள் எழுப்பப்பட்டது.ஆயிரகணக்கான முஸ்லிம் ஆண்களும்,பெண்களும் கலந்தது கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இறுதியில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி அவர்கள் நன்றிஉரை நிகழ்த்தினார்.  
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template